திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் கள்ளக்காதலனுடன்.. கணவனின் நிலை - தொடரும் அவலம்

Attempted Murder Telangana Relationship Crime
By Sumathi Jun 23, 2025 12:27 PM GMT
Report

கள்ளக்காதலுக்காக, கணவலை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

தகாத உறவு

தெலங்கானா, கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜஸ்வர்(32). தனியார் நில சர்வேயராக வேலை செய்து வந்தார். கல்லூரை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் கள்ளக்காதலனுடன்.. கணவனின் நிலை - தொடரும் அவலம் | Woman Kill Husband For Lover Telangana

திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா திடீரென காணாமல் போனார். பிரபல வங்கியில் கேஷியராக உள்ள ஒருவரை காதலித்ததால் அவருடன் சென்று விட்டதாக எண்ணியுள்ளனர். தொடர்ந்து வீடு திரும்பிய ஐஸ்வர்யா, வருங்கால கணவருக்கு போன் செய்து நான் யாரையும் காதலிக்கவில்லை

வரதட்சணை கொடுக்க தனது தாய் சிரமப்படுவதை தாங்க முடியாமல் தனதுதோழியின் வீட்டிற்கு சென்று இருந்ததாக கூறியுள்ளார். இதனை நம்பிய தேஜஸ்வர் குடும்பத்தினரை சமாதானம் செய்து, திருமணம் செய்துள்ளார். ஆனால் அதன்பின் ஐஸ்வர்யாவின் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனின் அவர் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற தேஜஸ்வர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் ஐஸ்வர்யா மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

வீடியோ மோகத்திற்கு அடிமையான மனைவி - கணவன் செய்த கொடூரம்!

வீடியோ மோகத்திற்கு அடிமையான மனைவி - கணவன் செய்த கொடூரம்!

மனைவி கொடூரம்

அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணையில் ஐஸ்வர்யா கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்து வீசியது தெரியவந்தது. தேஜஸ்வர் ஊரில் இல்லாதபோது கள்ளக்காதலனான வங்கி கேஷியரை வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இதனையறிந்த கணவர் கண்டித்ததால், கள்ளக்காதலரிடம் கூறி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் கள்ளக்காதலனுடன்.. கணவனின் நிலை - தொடரும் அவலம் | Woman Kill Husband For Lover Telangana

பின் காரில் வந்த நபர்கள் நிலம் அளக்க வேண்டும் என கூறி தேஜஸ்வரை காரில் அழைத்து சென்று, தேஜஸ்வரின் கழுத்தை அறுத்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அங்குள்ள சுகாரி மெட்டு பகுதியில் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். கொலைக்கு ஐஸ்வர்யாவின் தாய் சுஜாதாவும் உதவி செய்துள்ளார். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள வங்கி கேஷியரை தேடி வருகின்றனர்.