பிப்.8 முதல் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் – தமிழக அரசு!

education student college
By Jon Feb 05, 2021 05:05 AM GMT
Report

தமிழகத்தில் வாரத்திற்கு 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவியதால் கடந்த 10 மாதங்களை கடந்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன .இந்த நிலையில் தற்போது பொதுத் தேர்வு நெருங்கி வருவதால் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்க தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. வரும் பிப்ரவரி 8 ஆம் முதல் திறக்கப்படும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆகவே கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.