சிறுமியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீரை கலந்த மாணவர்கள், கொந்தளித்த கிராம மக்கள் - பரபரப்பு!

India Rajasthan
By Vinothini Aug 01, 2023 06:33 AM GMT
Report

மாணவி ஒருவரின் வாட்டர் பாட்டிலில் மாணவர்கள் சிறுநீரை நிரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவி

ராஜஸ்தான் மாநிலத்திம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வகுப்பில் பை மற்றும் தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு, மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வந்து தண்ணீர் அருந்துவதற்கு பாட்டிலை எடுத்தபொழுது அதில் துர்நாற்றம் வீசியது.

school-boys-filled-girls-water-bottle-with-urine

அதில் சிறுநீர் கலந்திருப்பதை உணர்ந்து அவர் அதிர்ச்சியடைந்தார், பின்னர் அவரது பையில் ஒரு லவ் லெட்டர் இருந்துள்ளது, இதனை மாற்று சமூகத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் செய்துள்ளதாக தெரியவந்தது. இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார், ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கலவரம்

இந்நிலையில், விடுமுறை முடிந்ததும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நேரில் சென்று புகாரளித்திருக்கின்றனர். அப்பொழுதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இதனால் கோபமடைந்த கிராம மக்கள் அந்த மாணவரின் வீட்டிற்கு திறந்து சென்றுள்ளனர்.

school-boys-filled-girls-water-bottle-with-urine

ஆனால் தகவல் அறிந்த போலீசார் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க சூழ்ந்துள்ளனர். அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை நெருங்க விடாமல் தடுத்துள்ளனர். இதனால் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கிராம மக்கள் போலீஸ் மீது கற்களை தூக்கி வீசியுள்ளனர் அதனால் தடியடி நடத்தப்பட்டது, சற்றுநேரத்தில் கலவரமாக மாறியுள்ளது. தொடர்ந்து, போலீசார், " இதுவரை பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினர் எந்தப் புகாரையும் தெரிவிக்கவில்லை என்பதால், வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளனர்.