சனாதன விவகாரம்...உதயநிதிக்கு அதிரடியாக உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

Udhayanidhi Stalin DMK Delhi Supreme Court of India P. K. Sekar Babu
By Karthick Sep 22, 2023 07:42 AM GMT
Report

சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதன எதிர்ப்புப் பேச்சு பேசியது தொடர்பாக அமைச்சர் உதயநிதி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

உதயநிதி பேச்சு  

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.

sc-summons-udhayanidhi-in-sanathanam-issue

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு  

மேலும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்றம், சனாதன சர்ச்சை விவகாரத்தில் ஏன் உயர்நீதிமன்றத்தை நாடக்கூடாது என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

sc-summons-udhayanidhi-in-sanathanam-issue

மேலும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதன எதிர்ப்புப் பேச்சு பேசியது தொடர்பாக அமைச்சர் உதயநிதி பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவோம்....அமைச்சர் உதயநிதி

சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவோம்....அமைச்சர் உதயநிதி

தொடர்ந்து அந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றதை பற்றி தமிழக அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.