சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவோம்....அமைச்சர் உதயநிதி

Udhayanidhi Stalin M K Stalin Tamil nadu DMK
By Karthick Sep 10, 2023 09:51 AM GMT
Report

சனாதனத்தை குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை குறித்து பேசுவோம் என உதயநிதி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி உரை

திமுகவை சேர்ந்த நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் தமிசாஹா விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

will-continue-talking-about-sanathanam-says-udhay

அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், சனாதன ஒழிப்பு மாநாட்டில் தான் கலந்துகொண்டு பேசியது ஒருநாள் செய்தி என்றும் அதை பொய்யாக திரித்து இந்திய அளவில் பேச வைத்துவிட்டார்கள் என கூறினார். மேலும், சனாதனத்தை குறித்து தொடர்ந்து பேசுவோம் என தெரிவித்த உதயநிதி, சனாதனத்தை பற்றி இப்போது பேசவில்லை என்றும் கடந்த 200 ஆண்டுகளாக பேசி வருகிறோம், இனியும் தொடர்ந்து பேசுவோம் என் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவை மாற்றிய பிரதமர்

ஜி20 மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்த குடிசைகளை திரை போட்டு மூடியது தான் மத்திய அரசின் சாதனை என விமர்சித்து, பாஜகவின் ஊழல்கள் வெளிப்பட்டு வருகிறது என்றும் அதை மறைக்கவே தன் மீது அவதூறு பரப்பி வருகின்றனர் என குற்றம்சாட்டினார்.

will-continue-talking-about-sanathanam-says-udhay

மணிப்பூரில் நடந்த இனப்படுகொலைகளை காணாது கண்மூடி இருந்தவர் பிரதமர் மோடி என சாடிய உதயநிதி ஸ்டாலின், இந்தியாவை மாற்றுவதாக கூறிய பிரதமர் மோடி தற்போது இந்தியா பெயரை தான் மாற்றியுள்ளார் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் பாசிச ஆட்சியை தோற்கடிப்போம்என உறுதிபட தெரிவித்தார்.