சிக்கலில் பொன்முடி..!! முறைகேடு வழக்கில் அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!!

Tamil nadu Supreme Court of India K. Ponmudy
By Karthick Nov 06, 2023 10:23 AM GMT
Report

அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்திருந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவருக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கி இருக்கின்றது.

வழக்கின் பின்னணி  

கடந்த 1996-2001-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார் தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. அப்போது வருமானத்துக்கு அதிகமாக அதாவது சுமார் 1.36 கோடி ரூபாய் அளவுவிற்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த வழக்கின் விசாரணையில் இருந்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பொன்முடி மற்றும் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அவரின் குடும்பத்தினரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

sc-refuses-ponmudy-appeal-hc-judge-review-case

இந்த தீர்ப்பை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இதற்கு எதிராக வழக்கின் விசாரணையை ரத்து செய்யக்கோரியும், இடைக்காலத் தடை கோரியும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தொடர்ந்து மறுப்பு...மீண்டும் நீடிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்!!

தொடர்ந்து மறுப்பு...மீண்டும் நீடிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்!!

தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, "ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு நன்றி எனக் கூறி, அமைச்சருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சரிதான் என்று சுட்டிக்காட்டினார்.  

sc-refuses-ponmudy-appeal-hc-judge-review-case

இதில், மனுதாரருக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், இந்த வழக்கு தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வரும்போது, அதை தெரிவித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

சிக்கலில் பொன்முடி..!! முறைகேடு வழக்கில் அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!! | Sc Refuses Ponmudy Appeal Hc Judge Review Case

இது தற்போது அமைச்சர் பொன்முடிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது. முன்னதாக, இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இருந்து தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.