திருந்த ஒரு வாய்ப்பு; தப்பு கணக்கு அப்போ புரியும் - சைலண்டா காய் நகர்த்தும் சசிகலா!

Tamil nadu V. K. Sasikala Lok Sabha Election 2024
By Sumathi Apr 20, 2024 05:04 AM GMT
Report

தேர்தலுக்கு பிறகு நிச்சயம் ஒரு மாற்றம் நடக்கும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

சசிகலா 

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

sasikala

பல்வேறு பகுதிகளில் பிரபல தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர்கள் நடிகைகள் உள்ளிட்ட பலரும் காலையிலிருந்து வாக்குச்சாவடியில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

அந்த வரிசையில், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் சசிகலா தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து விரலில் மையுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.

சசிகலா காலில் தானே விழுந்தேன்.. ஒரே வரியில் காலி செய்த இபிஎஸ்!

சசிகலா காலில் தானே விழுந்தேன்.. ஒரே வரியில் காலி செய்த இபிஎஸ்!

தேர்தல் முடிவு

அதன்பின், போயஸ் கார்டன் இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேர்தலில் தனது ஜனநாயக கடைமையாற்றியுள்ளேன். மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கான வாய்ப்பு இருக்கும்.

திருந்த ஒரு வாய்ப்பு; தப்பு கணக்கு அப்போ புரியும் - சைலண்டா காய் நகர்த்தும் சசிகலா! | Sasikala Says Admk Change Come After Election

அவர்கள் போட்ட தப்புக் கணக்கு அவர்களுக்கு புரியும் எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது அதிமுகவினரிடையே பேசுபொருளாகியுள்ளது.

மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறி வைத்தே சசிகலா இப்படி பேசியதாக அவரது ஆதரவாளர்கள் வட்டாரங்களில் பேசப்படுகிறது.