ரொம்ப வருஷமா இதுதான் நடக்குது.. எந்த எதிர்பார்ப்பும் இல்ல - விரக்தியில் சர்பராஸ் கான்
டெஸ்ட் தொடரில் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லை என சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த இளம்வீரர் சர்பராஸ் கான்(26). 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை போட்டிகளில் இருந்தே விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரிலும் விளையாடியுள்ளார்.
9 ஆண்டுகளாக இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருந்து இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மூன்று போட்டிகளில் மூன்று அரை சதத்துடன் 200 ரன்கள் அடித்து அசத்தினார்.
சர்பராஸ் கான் ஆதங்கம்
இதனால் டெஸ்ட் அணியில் தொடர்ந்து நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணியில் இடம் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து அவர் பேசுகையில், வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் எனக்கு இடம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
நான் என்னுடைய பணியை செய்து அந்த தொடர்காக தயாராக இருப்பேன். எதிர்வரும் இந்த சில நாட்களில் துலீப் டிராபி மற்றும் புஜ்ஜி பாபு தொடர்களில் விளையாட உள்ளேன். இந்த 2 தொடர்களிலும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.
நான் எனது வாய்ப்புக்காக எப்போதுமே காத்துக்கொண்டிருப்பேன். இதைத்தான் நீண்ட காலமாக செய்து வருகிறேன். மீண்டும் அதையே செய்ய இருக்கிறேன் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.