நல்ல ஃபார்ம்.. ஆனால், நடராஜனுக்குடெஸ்ட் கிரிக்கெட் அணியில் வாய்ப்பில்லை - பிசிசிஐ முடிவு!
நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை.
நடராஜன்
பாகிஸ்தான், ஆஸ்திரேலிய போன்ற அணிகள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து எதிரணிகளை அலறவிடுகிறது.
இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ஆர்ஸ்தீப் சிங்கை பயன்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ஆனால், 33 வயதான நடராஜன் இன்னும் நன்றாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.
பிசிசிஐ நிராகரிப்பு
தற்போது பிசிசிஐ அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. நடந்து முடிந்த டி என் பி எல் தொடரில் சிறப்பாக விளையாடிருந்தார். இந்திய அணிக்கு விளையாடி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. மீண்டும் இந்திய அணிக்காக விளையாட கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.
துலீப் கோபைக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் பல வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தார்கள். அடிக்கடி காயம் ஏற்பட்டு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட
உம்ரான் மாலிக், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், நடராஜன் துலீப் கோப்பையில் கூட சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.