சரத்பாபுவால் வாழ்க்கையை இழந்த பிரபல நடிகை - இயக்குநர் ரகசிய உதவி!

Sumathi
in பிரபலங்கள்Report this article
சரத்பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சரத்பாபு
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் சரத்பாபு. நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும், உதிரிப்பூக்கள், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து, ஆளவந்தான், பாபா உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக உடல்நிலை குறைவால் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவரது கடந்தகால ஸ்டோரி வைரலாகி வருகிறது. 70, 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரமா பிரபா.
ரமா பிரபா வேதனை
தன்னைவிட 5 வயது குறைந்த சரத்பாபுவை காதலித்து இருவரும் 14 ஆண்டுகள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்துள்ளனர். ஆனால், ரமா பிரபாவிடம் இருந்த சொத்துகளை சரத்பாபு ஏமாற்றி வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
தன்னுடன் இணைந்திருந்த சரத்பாபு, பெரிய நடிகரானதும் ஒதுங்கி விட்டதாக ரமா பிரபா தெரிவித்துள்ளார். அப்போது, நடிக்க வாய்ப்புகள் அமையாமல் ரொம்பவே கஷ்டத்தில் இருந்துள்ளார்.
அந்த சமயத்தில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் அவரை 5 நாட்கள் மட்டுமே நடிக்க வைத்து போன் நம்பர், அட்ரஸ் வாங்கிக்கொண்டு திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், அவரது வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 20000 ரூபாய் பணம் அனுப்பியுள்ளார்.