இன்னும் எவ்ளோ வருஷம் இப்படியே..? தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு..!! கடுப்பான ரசிகர்கள்!!
இந்திய அணியில் பெரிய இடத்திற்கு வருவார் என்று ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வீரராகவே சஞ்சு சாம்சன் நீடித்து வருகின்றார்.
சஞ்சு சாம்சன்
IPL தொடரில் தற்போது ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பவர் சஞ்சு சாம்சன். இந்திய அணியில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான இவருக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அதே போல, அவ்வப்போது சிறிய சிறிய வாய்ப்புகளை மட்டுமே அவருக்கு வழங்குவதாகவும், திறமையான விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான சஞ்சுவை இந்திய அணி இது வரை உபயோகித்து கொள்ளவில்லை என்றும் கருத்துக்கள் தற்போது வரை நீடித்தே வருகின்றது.
நடந்து முடிந்த உலகக்கோப்பை ஒருநாள் தொடர் போட்டிக்கான அணியில் அவருக்கு இடம் வழங்கவில்லை. அதே போல, தான் வரும் உலகக்கோப்பை டி20 தொடரிலும் அவரை ஒதுக்கி வைக்க பிசிசிஐ எண்ணுகிறதா? என ரசிகர்கள் பேசத்துவங்கிவிட்டனர்.

ஏனெனில், நடைபெறவுள்ள தென்னாபிரிக்கா அணிக்கான எதிரான தொடரில் அவருக்கு ஒருநாள் போட்டியில் தான் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டி20 தொடரில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை. இது தற்போது, சமூகவலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கின்றது.
இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து IBC Tamil
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம் IBC Tamil