கிரிக்கெட் ஆட விடுங்க.. முழுசா பெண்ணாக மாறிவிட்டேன் - அனயா கோரிக்கை
அனயா பங்கர் விடுத்துள்ள கோரிக்கை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனயா பங்கர்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆரியன் பங்கர்.ஜூனியர் பிரிவில் விளையாடியவர்.
தற்போது தன்னை பெண்ணாக உணர்ந்து அதற்கான உடல் ரீதியான மாற்று சிகிச்சைகளை எடுத்துக்கொண்டுள்ளார். மேலும் தனது பெயரை அனயா பங்கர் மாற்றியுள்ளார். இந்நிலையில், தான் முற்றிலும் பெண்ணாக மாறிவிட்டதற்கான மருத்துவ அறிக்கை ஒன்றை கையில் வைத்துக் கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தான் முழுவதுமாக ஒரு பெண் விளையாட்டு வீராங்கனையாக மாறிவிட்டதற்கான அறிக்கை இது. கடந்த ஓராண்டாக ஹார்மோன் சிகிச்சை ஆரம்பித்து அங்கிருந்து பல்வேறு ஆய்வுகளை செய்து இந்தச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஐசிசிக்கு கோரிக்கை
இந்த ஆய்வு அறிக்கை தனது கருத்துக்களையோ, அனுமானங்களையோ சொல்லவில்லை. ஆனால், உண்மையான தகவல்களைச் சொல்கிறது. இந்த அறிக்கையை பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு சமர்ப்பித்துள்ளேன். இதன் மூலம் இந்த தரவுகளை வைத்து ஒரு விவாதத்தைத் துவங்க வேண்டும் என்பதே தனது நோக்கம்.
பயத்தை உருவாக்கப் போவதில்லை. மாற்றுப் பாலினத்தவருக்கான இடத்தை உருவாக்க முயற்சிக்கிறேன். ற்கனவே இருப்பதைப் பிரிப்பதற்கு முயற்சி செய்யவில்லை.
அறிவியல் நான் மகளிர் கிரிக்கெட் ஆடுவதற்குத் தகுதியானவள் என்று சொல்கிறது. இந்த உண்மையை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளுமா என்பதே இப்போதைய கேள்வி" என கேள்வி எழுப்பியுள்ளார்.