மோசமடைந்த உடல்நிலை - ஆயுர்வேத சிகிச்சையில் சமந்தா!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகை சமந்தா தற்போது ஆயுர்வேத சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா
தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது. அதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நான் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் மயோஸிடிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டேன். இது சீக்கிரம் சரியானதும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் என அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்தார்.
ஆயுர்வேத சிகிச்சை
சமீபத்தில் நேர்கானல் ஒன்றில், சில நாட்களில், ஒரு அடி எடுத்து வைப்பது கூட கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் நான் இப்போது திரும்பிப் பார்க்கும்போது, இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் என ஆச்சரியப்படுகிறேன். நான் இங்கே போராட வந்திருக்கிறேன் என வேதனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சமந்தாவிற்கு மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என சமந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவர் பாதிக்கப்பட்டுள்ள மயோசிடிஸ் நோய்க்கு மருந்து இல்லை குணமாக பல காலம் தேவைப்படலாம் என செய்திகள் வெளியானது. தற்போது, சமந்தா தனது வீட்டில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிகிச்சையின் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.