சமூக வலைதளங்களில் இருந்து விலகிய சமந்தா.. ஏன் தெரியுமா?
நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து விலகி நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவின் முக்கிய நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது, திரைப்படங்கள் தாண்டி வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தி, மலையாளம் என்ற பூர்வீகத்தை உடைத்து தமிழ் பேசும் நம்ம ஊர் பெண் என்ற தனித்துவத்தால் எளிதில் ரசிகர்களை கவர்ந்த சமந்தா,
இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கைவசம் படங்களை வைத்திருக்கிறார். இந்நிலையில், ஹாலிவுட்டின் ரூசோ பிரதர்ஸ் இயக்கும் சிட்டாடெல் இணையதொடரில் சமந்தா இடம்பெற்றுள்ளார்.
சமூக வலைதளம்
இன்ஸ்டா கிராம் தளத்தில் சமந்தாவை 2.4 கோடிப்பேர் பின் தொடர்கின்றனர். மேலும், நடிகை சமந்தா தனது சமூக வலைதள பயன்பாட்டை தவிர்க்கத் தொடங்கியுள்ளார். தனது படங்களின் புரொமோஷனுக்கான பதிவுகளை தவிர்த்து, அவரது தனிப்பட்ட பதிவுகள் குறைந்துள்ளன.
கடைசியாக அவர் இன்ஸ்டாவில் ஜூன் 16-ம்தேதி தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதன்பின்னர் அவர் பதிவிட்டவை விளம்பரம் மற்றும் படங்களின் புரொமோஷன் தொடர்புடையவைதான். இதனைத் தொடர்ந்து ட்விட்டரிலும் சமந்தா பயன்பாட்டை குறைத்திருக்கிறார்.
நடிப்பில் கவனம்
சமந்தா தற்போது அடுத்தடுத்த படங்கள் மற்றும் இணைய தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிக்கும் சிட்டாடெல் இணையதொடருக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் தற்காப்பு கலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படத்தின் டீசர் அடுத்த மாதம் 9-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.