அவளுக்காக போட்ட டாட்டூ... அதை அழிக்க மனம் இல்லை - நாக சைதன்யா உருக்கம்

Samantha Naga Chaitanya
By Nandhini Aug 10, 2022 07:35 AM GMT
Report

சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.

கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா.

இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.

அடுத்தடுத்து ஹிட்டடித்த படங்கள்

சில மாதங்களுக்கு முன்பு ‘புஷ்பா’ படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார். இப்பாட்டு வெளியான ஓரிரு நொடிகளிலேயே செம்ம வைரலாக பரவி பட்டித்தொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இதனையடுத்து, சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி அள்ளியுள்ளது.

samantha - naga chaitanya

மனம் திறந்த நாகசைதன்யா

நடிகர் நாகசைதன்யா இந்தியில் முதன்முதலாக ‘லால் சிங் சத்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், நடிகர் அமீர்கானின் நண்பனாக, ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் நாக சைதன்யா கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் கையில் உள்ள டாட்டூ பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில், அது தனது திருமண தேதியை குறிக்கும் டாட்டூ. அது தெரியாமல் என் ரசிகர்கள் பலர் இதை காப்பி அடித்து வருகிறார்கள். தயவு செய்து அவ்வாறு செய்யாதீர்கள். இந்த டாட்டூவை அழிக்கும் எண்ணம் இதுநாள் வரைக்கும் எனக்கு வரவில்லை. எதையும் மாற்ற நான் விரும்பவில்லை. அது அப்படியே இருப்பதில் எந்த பிரச்சனையும் எனக்கில்லை என்று கூறினார்.