250 கோடி கொடுத்து ஆசைக்காட்டிய மாஜி கணவர் - தூங்கி எழுந்ததும் ஷாக்கான சமந்தா??

Samantha Naga Chaitanya
By Karthick May 27, 2024 05:31 AM GMT
Report

நடிகை சமந்தா தற்போது பங்காரம் என்ற படத்தில் நடிக்க கம்மிட்டாகியுள்ளார்.

சமந்தா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை சமந்தா, சில காலமாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடியாமல் இருக்கின்றார்.

Actress Samantha

தமிழ், தெலுங்கு என அநேக முன்னணி நாயகர்களுடன் நடித்த சமந்தா, நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறார். ஓ மை பேபி, சாகுந்தலம், யசோதா போன்ற படங்களில் கதையின் நாயகியாக சமந்தா நடித்தாலும், நடுவில் விஜய் தேவரைக்கொண்டாவுடன் "குஷி" படத்திலும் நடித்தார்.

Samantha Bangaram poster

தற்போது அவரின் நடிப்பில் பங்காரம் என்ற படம் துவங்கவுள்ளது. சமந்தாவின் பிறந்தநாளில் படத்தின் போஸ்டர் வெளியான நிலையில், முதற்கட்ட பணிகள் சூடுபிடித்துள்ளன.

யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை - லீக்கான புகைப்படம்!! சமந்தா பதிலடி

யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை - லீக்கான புகைப்படம்!! சமந்தா பதிலடி

அதே போல, ஹிந்தியில் citadel வெப் தொடர் வெளியீட்டையும் சமந்தா எதிர்பார்த்துள்ளார். முன்னதாக அவரின் விவாகரத்தின் போது, பல விதமான கேள்விகள் எழுந்தன.

250 கோடி

சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா குடும்பத்தினை தரப்பில் 250 கோடி ரூபாய் பணம் அளிக்கப்பட்டதாகவெல்லாம் தகவல் வெளியாகின. ஆனால், இது குறித்து அவரே கரண் ஜோகரின் "காபி வித் கரண்" நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

samantha 250 crore alimony karan johar show

விவாகரத்துக்கு 250 கோடி ஜீவனாம்சம் கொடுப்பதாக கூறி ஒரு செய்தியை தூங்கி எழுந்தப்பின் பார்த்து வருத்தப்பட்டதாகவும், எப்போது இன்கம் டேக்ஸ் அதிகாரிகள் வருவார்கள் அவர்களிடம் என்னிடம் எதுவுமே இல்லை என காட்டுவதற்காக காத்திருந்தேன் என்றும் காமெடியாக கூறியிருந்தார்.