தோனி சீக்கிரம் விளையாடி முடிங்க..குழந்தை பிறக்கப் போகுது - சாக்ஷி சொன்ன ஹாப்பி நியூஸ்!
போட்டியின் இடையே தோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்ட பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தோனி-சாக்ஷி
நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய சிஎஸ்கே அணி களமிறங்கியது. 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.
இந்த இலக்கை சேஸ் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சற்று தடுமாற்றத்துடன் தொடர் விக்கெட்களை இழந்தது. இதனையடுத்து, சிஎஸ்கே அணி எப்படியும் வெற்றி பெறப் போவது உறுதியான நிலையில், சாக்ஷி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்தார்.
ஹாப்பி நியூஸ்
அதில் தோனி கீப்பிங் செய்யும் புகைப்படத்தோடு, "இன்று சீக்கிரம் போட்டியை முடித்து விடுங்கள். குழந்தை பிறக்கப் போகிறது. வலி எடுக்கத் துவங்கி விட்டது. இது அத்தையாகப் போகும் எனது கோரிக்கை" என்று குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.
இதனை அடுத்து, சாக்ஷியின் சகோதரர் மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியை விரைவாக வெற்றி பெறுங்கள் என அதிக நம்பிக்கையுடன் கூறி சாக்ஷி பகிர்ந்த இந்த பதிவு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது.
அதன்படி, இந்தப் போட்டி 18.5 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. 7 பந்துகள் மீதமிருக்கும் போதே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்களுக்கு சுருண்டது. சிஎஸ்கே அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.