வயதுக்கு வந்தவுடன்..அவரோடுதான் திருமணம் - அப்பாவுக்கு சாய் பல்லவி சொன்ன நோ!

Sai Pallavi Marriage
By Swetha Sep 24, 2024 10:30 AM GMT
Report

திருமணத்தில் தனது அப்பாவின் விருப்பம் குறித்து சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவி

பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் நடித்து வருகிறார்.

வயதுக்கு வந்தவுடன்..அவரோடுதான் திருமணம் - அப்பாவுக்கு சாய் பல்லவி சொன்ன நோ! | Sai Pallavi Openly Talks About Her Marriage

இதை தொடர்ந்து பாலிவுட்டில் ராமாயணத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட வரும் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சாய் பல்லவி அளித்த ஒரு பேட்டியில் தனது திருமணம் பற்றி பேசியிருக்கிறார்.

அதுகுறித்து அவர் பேசுகையில், "நான் வயதுக்கு வந்தவுடன், நீ ஒரு படுகர் இனத்தை சேர்ந்தவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.

10 வருடங்களாக அவரை காதலித்து வருகிறேன் - சீக்ரெட்டை உடைத்த சாய் பல்லவி

10 வருடங்களாக அவரை காதலித்து வருகிறேன் - சீக்ரெட்டை உடைத்த சாய் பல்லவி

திருமணம் 

எனது கிராமத்தில் படுகர் இனம் இல்லாமல் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டால் நல்லது, கெட்டதுக்கு அழைக்கமாட்டார்கள். நான் சினிமாவுக்கு வந்த சில காலம் கழித்து எனது அப்பா என்னிடம் வந்தார்.

வயதுக்கு வந்தவுடன்..அவரோடுதான் திருமணம் - அப்பாவுக்கு சாய் பல்லவி சொன்ன நோ! | Sai Pallavi Openly Talks About Her Marriage

அப்போது, நீ படுகர் இனத்தில் இருப்பவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இது கலாசாரத்தை பற்றியது என்று சொன்னார். ஆனால் அவர் ஒரு அப்பாவி.

உடனே நான் அவரிடம், உங்கள் கலாசாரத்துக்காக நீங்கள் விரும்புவதை எல்லாம் என்னால் செய்ய முடியாது. அது ரொம்பவே தவறு என்றேன்" என கூறினார்.