சச்சின் விரைவில் நலம் பெற வேண்டும்: முக ஸ்டாலின் டுவிட்
இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவர் விரைவில் நலம்பெற வேண்டி ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவரான ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் கொரோனா தொற்றில் இருந்து விரைந்து நலம்பெற வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்று அலையினை விழிப்போடு எதிர்கொள்ளுமாறும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறும் நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Wishing the cricket legend @sachin_rt a speedy recovery from #COVID19. I request everyone in the country to be vigilant about the ongoing wave of pandemic and take vaccine. https://t.co/Kz71p5ruFb
— M.K.Stalin (@mkstalin) April 2, 2021