எனது வாய்ப்பு தான் தோனிக்கு.. ஏன் தெரியுமா? - ரகசியத்தை போட்டுடைத்த சச்சின்!
எம்.எஸ்.தோனியின் கேப்டன்சி குறித்து இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார்.
எம்.எஸ்.தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி. இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் தோனியின் கேப்டன்சி குறித்து இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார்.
பரிந்துரை செய்தேன்
அவர் கூறியதாவது "2007-ல் பிசிசிஐ கேப்டன் பதவி வாய்ப்பை எனக்கு வழங்கியது. ஆனால், என்னுடைய உடல் அப்போது மிகவும் மோசமாக இருந்தது. தோனியின் மனநிலை மிகவும் நிலையானது.
அமைதியானவர். சரியான முடிவை எடுப்பார் என்ற அவர் மீதான என்னுடைய அவதானிப்பு மிகவும் சிறந்த வகையில் இருந்தது. இதனால் அவரை கேப்டன் பதவிக்கு பரிந்துரை செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.