ஆர்எஸ்எஸ் விழாவில் நான் பங்கேற்றேனா? எஸ்.பி.வேலுமணி ஓபன்டாக்!
ஆர்எஸ்எஸ் விழாவில் கலந்து கொண்டதாக வெளியான புகைப்படங்கள் குறித்து எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் விழா
கோவை விமான நிலையத்தில் அதிமுக மூத்த தலைவர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''பேரூர் ஆதீனத்தில் நடைபெற்றது கொங்கு மண்டலத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சி.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசமி அடிகளார் நூற்றாண்டு நிகழ்விற்குதான் சென்றோம். ஆன்டுதோறும் சாந்தலிங்க அடிகளார் ஜீவசமாதி அடைந்த நிகழ்வில் பங்கேற்பது வழக்கம். ஆகவே இந்த முறையும் எங்களுக்கு அதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

ஏற்கனவே ராமர் கைவிட்டு விட்டார்; இப்போ முருகன் 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் - செல்வப்பெருந்தகை
எஸ்.பி.வேலுமணி விளக்கம்
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு எங்களை கூப்பிட மாட்டார்கள். நாங்களும் பங்கேற்க மாட்டோம். எங்களை அழைத்தது சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழாவிற்கு தான். ஆனால் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல் பரப்பபடுகின்றது. மடத்தில் நடந்த நூற்றாண்டு விழாவிற்கு தான் சென்றோம்.
ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அடிகளாரின் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மோகன் பகவத் அழைக்கப்பட்டு இருந்தார். அது என்னுடைய தொகுதி என்பதால் அவருக்கு முருகன் சிலை, வேல் போன்றவை பரிசாக வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு எங்களை யாரும் அழைக்க மாட்டார்கள்.
திமுகவை மக்கள் முழுமையாக எதிர்க்கின்றனர். அதை மறைக்க சாதரணமாக ஒரு மகான் நிகழ்விற்கு செல்வதை இப்படி திரித்து சொல்கின்றனர். இது மனசாட்சி இல்லாதவர்கள் செய்கின்ற வேலை'' எனத் தெரிவித்துள்ளார்.