அமித்ஷா பேசியதெல்லாம் அவரது தனிப்பட்ட கருத்து - நழுவிய இபிஎஸ்

Amit Shah Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Sumathi Jun 21, 2025 01:30 PM GMT
Report

ஆங்கிலம் குறித்து அமித் ஷா பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா பேச்சு 

சென்னையிலிருந்து விமானம் மூலமாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோவை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

EPS - amit shah

”அவரவர் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவர் விருப்பம். அது ஜனநாயகத்தின் உரிமை முருக பக்தர்கள் மாநாட்டை மதுரையில் நடத்துகிறார்கள். மாநாட்டிற்கு வாழ்த்துக்கள். ஆங்கிலம் குறித்து அமித் ஷா பேசியது அவரது தனிப்பட்ட கருத்து.

ஏதோ ஒரு மாநாடு.. ஒரு வேல் எடுத்துட்டு ஊர்வலம் வந்தா நம்பிருவாங்களா? கனிமொழி தாக்கு

ஏதோ ஒரு மாநாடு.. ஒரு வேல் எடுத்துட்டு ஊர்வலம் வந்தா நம்பிருவாங்களா? கனிமொழி தாக்கு

இபிஎஸ் கருத்து

தாய் மொழி முக்கியம் என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால், தற்போது தாய்மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்கிற பொருளில்தான் அவர் பேசியிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரைக்கும் மக்களிடத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பு இருக்கிறது.

அமித்ஷா பேசியதெல்லாம் அவரது தனிப்பட்ட கருத்து - நழுவிய இபிஎஸ் | Edappadi Palaniswami About Amitsha English

மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை எல்லாம் மறைப்பதற்காக, மடைமாற்றம் செய்வதற்காக கேலிச்சித்திரங்கள் வெளியிடுவது, அவதூறுகளை பரப்பி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

கேலி சித்திரங்களுக்கு 2026 இல் தக்க தண்டனை மக்கள் வழங்குவார்கள். யோகா என்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. அதனை பிரதமர் முன்னெடுத்து நடத்தி வருகிறார் அதற்கு வாழ்த்துகள்.” எனத் தெரிவித்துள்ளார்.