ஷோபாவை நான் பல தடவை அடித்துள்ளேன்... ஆனாள் அவள்... - சீக்ரெட்டை போட்டுடைத்த எஸ். சந்திரசேகர் - ஷாக்கான ரசிகர்கள்

Vijay Shoba S. A. Chandrasekhar
By Nandhini Jul 10, 2022 01:12 PM GMT
Report

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று அந்தஸ்த்தை பெற்றுள்ளார் நடிகர் விஜய். சமீபத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படம் வசூலில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.

சஷ்டியப்த பூர்த்தி விழா

சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.சந்திரசேகருக்கும், தாய் ஷோபாவிற்கும் திருக்கடையூரில் 80வது சஷ்டியப்த பூர்த்தி விழா நடந்தது. தன்னுடைய 80வது மணிவிழாவையும் மிகவும் எளிமையாக நடத்தி முடித்தார். ஆனால், இந்த விழாவிற்கு விஜய் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் யாரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. எஸ்.ஏ.சந்திரசேகர் தங்களுடைய மணி விழா புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, 80 வயது பூர்த்தி... திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகபூஜை செய்து சாமி தரிசனம் செய்தோம் என பதிவிட்டுள்ளார். 

S. A. Chandrasekhar

ஷோபாவை பல தடவை அடித்திருக்கிறேன்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி எஸ்.சந்திரசேகர் மனம் விட்டு பேசியுள்ளார்.

அப்பேட்டியில் அவர்,

என் திருமணத்திற்கு, எனது அம்மா, அண்ணன் எல்லாரும் வந்தார்கள் ஆனால் கடைசி வரை என் அப்பா வரவே இல்லை. சிவாஜி அண்ணன் மனைவி கமலாம்மா தாலி எடுத்து கொடுக்க நான் ஷோபா கழுத்தில் கட்டினேன்.

எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஆனால், நான் முரட்டு பையன், கோபக்காரன். ஆனால் நான் எப்படிபட்டவன் என்பது ஷோபாவுக்கு மட்டும் தான் நன்றாக தெரியும். பலமுறை அவளை நான் அடித்திருக்கிறேன். வேறு ஒருவராக இருந்தால் என்னை விட்டு பிரிந்து சென்றிருப்பார்.

ஆனால் ஷோபா அப்படி இல்லை. அவள் இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் அவள் இல்லை. அடித்துவிட்டாலும் மறுநாள் அவளிடம் சென்று நான் மன்னிப்பு கேட்பேன். உடனே அவள் அனைத்தையும் மறந்துவிட்டு புது காதலனாக என்னை ஏற்றுக் கொள்வாள்.

என்னுடைய எனர்ஜியே அவள்தான். கடவுளிடம் ஒன்று வேண்டிக்கொள்கிறேன். அவளது காதலனாக இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடைசி வரை காதலனாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனம் திறந்து பேசினார்.

தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

உங்கள் அன்புக்கு நன்றி.. சிகிச்சை முடிந்து முதல்முறையாக நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி