கழட்டி விட்ட ரோஹித்; ருதுராஜ் இந்திய அணியில் இல்லை - பிசிசிஐ முடிவு!
ருதுராஜ் கெய்க்வாட் டி20 உலகக்கோப்பை அணியில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்
2024 ஐபிஎல் தொடர் முடிந்த பின் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. அதன்படி, இந்திய அணி 2 நாட்ககளில் அறிவிக்கப்படவுள்ளது.
இரண்டு துவக்க வீரர்கள் மற்றும் ஒரு மாற்று துவக்க வீரரை மட்டுமே அணியில் தேர்வு செய்ய முடியும் என்ற நிலையில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா என 6 பேருக்கு மத்தியில் போட்டி நிலவி வருகிறது.
டி20 உலகக்கோப்பை?
இதில் மூத்த வீரர் என்ற அடிப்படையில் விராட் கோலியும், கேப்டன் என்பதால் ரோஹித் சர்மாவும் முதல் நிலை துவக்க வீரராக தேர்வு செய்யப்படவுள்ளனர். சுப்மன் கில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்வார் என்பதால் அவரை அணியில் சேர்க்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அவர் தேர்வு செய்யப்படவில்லையென்றால் ஜெய்ஸ்வால் அணியில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெறமாட்டார்.
மேலும், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில்லை அணியில் தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.