கேப்டனா அப்படி இருக்க விரும்பவில்லை..முடிவை நான் தான் எடுப்பேன்- ருதுராஜ் பேச்சு!

Ruturaj Gaikwad Chennai Super Kings IPL 2024
By Swetha Apr 10, 2024 04:09 AM GMT
Report

சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் ஒரே கதாபாத்திரமாக இருக்க விரும்பவில்லை.என்று கூறியுள்ளார்.

ருதுராஜ் பேச்சு

நடப்பாண்டின் ஐபிஎல் டி 20 சீசன் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சில நாட்களுக்கு முன் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

கேப்டனா அப்படி இருக்க விரும்பவில்லை..முடிவை நான் தான் எடுப்பேன்- ருதுராஜ் பேச்சு! | Ruturaj Gaikwad Speaks About Being Captain

தொடர்ந்து தோல்வியை தழுவி வந்ததை அடுத்து, சிஎஸ்கேவுக்கு இது 3-வது வெற்றியாக அமைந்து. போட்டி முடிவடைந்த பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி அளித்திருந்தார். அப்போது, 2022-ம் ஆண்டில் தோனி என்னிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது, ‘அநேகமாக அடுத்த ஆண்டு (2023-ம் ஆண்டு) இல்லை.

ஆனால் அதன் பிறகு, நீங்கள் அணியை வழிநடத்துவதற்கான வாய்ப்பை பெறலாம், எனவே அதற்கு தயாராக இருங்கள் என கூறியிருந்தார். இதன் பிறகு நான் எப்போதும் தயாராகவே இருந்தேன். இது எனக்கு ஒன்றும் புதிதல்ல, ஆச்சரியமோ அதிர்ச்சியோ இல்லை. ஆட்டத்தின் போக்கை எப்படி கட்டுப்படுத்துவது என்று எனக்குத் தெரியும்.

சென்னைக்கு வந்த அடுத்த சிக்கல்...KKR போட்டியில் இருந்து வெளியேறிய முக்கிய வீரர்கள்..?

சென்னைக்கு வந்த அடுத்த சிக்கல்...KKR போட்டியில் இருந்து வெளியேறிய முக்கிய வீரர்கள்..?

அப்படி இருக்க விரும்பவில்லை

ஆட்டம் எவ்வாறு செல்கிறது எந்தவிதமான மாற்றம் செய்ய வேண்டும், அதை எப்போது செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் மகாராஷ்டிரா அணிக்காக இவற்றை நான் செய்துள்ளேன். கேப்டன்சி ரீதியாக, நான் ஒரு குறிப்பிட்ட வகையான கதாபாத்திரமாக இருக்க விரும்பவில்லை. சிஎஸ்கேவின் கலாச்சாரத்தை தொடர விரும்புகிறேன்.

கேப்டனா அப்படி இருக்க விரும்பவில்லை..முடிவை நான் தான் எடுப்பேன்- ருதுராஜ் பேச்சு! | Ruturaj Gaikwad Speaks About Being Captain

நாங்கள் பெற்ற வெற்றி மற்றும் நாங்கள் செய்து வரும் விஷயங்களில் ஒரு துளியை கூட மாற்ற நான் விரும்பவில்லை. எனது சொந்த முடிவுகளை எடுக்க விரும்புகிறேன், முடிந்தவரை வீரர்களுக்கு சுதந்திரம் கொடுக்க விரும்புகிறேன் ஏனென்றால் நான் சிஎஸ்கேவில் சேர்ந்ததிலிருந்து அதுதான் நடந்து வருகிறது.

கேப்டனாக பேட்டிங் செய்வது என்பது முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை. நான் எனது முதல் போட்டியில் விளையாடும் போதும், சிஎஸ்கேவுக்காக நான் அடித்த முதல் அரைசதமும் இதேபோன்ற சூழ்நிலையாகவே இருந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் 138 ரன்களை துரத்திக் கொண்டிருந்தோம்.

நான் எப்போதும் கடைசி வரை நிலைத்து நின்று இன்னிங்ஸை முடிக்க விரும்புவேன். நான் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதில் எந்த மாற்றமும் இல்லை,என்று அவர் தெரிவித்துள்ளார்.