67 நாள்கள் நடுக்கடலில் தத்தளிப்பு - 2 சடலங்களுடன் இருந்தவர் உயிருடன் மீட்பு!

Russia
By Sumathi Oct 16, 2024 08:30 AM GMT
Report

நடுக்கடலில் இரு சடலங்களுடன் இருந்தவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

67 நாட்கள் போராட்டம்

கிழக்கு ரஷ்யாவின் ஓகோட்ஸ்க் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடி படகு ஒன்று சகலின் தீவிலிருந்து 1000 கிலோகீட்டர் தூரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

67 நாள்கள் நடுக்கடலில் தத்தளிப்பு - 2 சடலங்களுடன் இருந்தவர் உயிருடன் மீட்பு! | Russian Man Rescued After Spending 67 Days In Sea

அதில், 46 வயது நபர் ஒருவர் உயிருடனும், இறந்த மனிதரின் உடலும், 15 வயது சிறுவனின் உடலும் இருந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, இவர்கள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டபோது ஹெலிகாப்டர் உதவியுடன் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

நடுக்கடலில் பற்றி எரிந்த 3,000 கார்கள்; இந்திய மாலுமி மரணம் - என்ன நடந்தது?

நடுக்கடலில் பற்றி எரிந்த 3,000 கார்கள்; இந்திய மாலுமி மரணம் - என்ன நடந்தது?

உயிர் பிழைத்த அதிசயம்

இதுகுறித்து உயிர் பிழைத்த நபரின் மனைவி கூறுகையில், அவர்கள் மூவரும் திமிங்கலத்தைப் பார்பதற்காக இரண்டு வாரத்துக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் கடலுக்குச் சென்றுள்ளனர். தற்போது அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவர் இதுவரை எதுவும் பேசாத நிலையில், படகில் இருந்து மீன்களைப் பிடித்துத் தின்று அவர் உயிர் வாழ்ந்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.