ரஷியாவின் வெடிமருந்து தொழிற்ச்சாலையில் பயங்கர தீ விபத்து, 4 பேர் பலி - உக்ரைனின் சதியா?
ரஷிய நாட்டின் வெடிமருந்து தொழிற்சாலையில் திடீரென விபத்து ஏற்பட்டதில் பரபரப்பு.
விபத்து
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது, இந்த சூழலில் சில நாட்களாக ரஷியாவின் ஆயுத கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தற்பொழுது ரஷிய நாட்டின் தலைநகரான மாஸ்கோவின் தென் கிழக்கே உள்ள தம்போவ் என்ற பகுதியில் வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அது இயங்கி வரும் நிலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
விசாரணை
இந்நிலையில், அங்கு பணியில் இருந்த 4 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். அதில் மேலும், 12 பேர் காயமடைந்துள்ளனர்.
திடீரென நிகழ்ந்த இந்த வெடி விபத்து குறித்து போலீசார் வைசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று தம்போவ் கவர்னர் மாக்சிம் யெகோரோவ் தெரிவித்துள்ளார்.