மீண்டும் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கிய ரஷ்யா - 11 பேர் பலி!
உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தயாரான ரஷ்ய நாட்டின் ஏவுகணையால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
போர்
கடந்த ஒன்றரை வருடமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையே போர் நடந்து வருகிறது. சில நாட்கள் ரஷ்ய நாட்டின் கூலிப்படை எதிர்த்தாக்குதல் நடத்த இருந்தனர், ஆனால் அதன்பிறகு பின்வாங்கியது.
தற்போது உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள ஒரு உணவகம் மீது ரஷிய ராணுவம் 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
உயிரிழப்பு
இந்நிலையில், அந்த உணவகத்திற்குள் ஏராளானோர் இருந்தனர். இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் தகவல் வெளியானது.
அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் உயிரிழந்த 11 பேரில், 3 குழந்தைகளும், 14 வயதுடைய இரட்டை சகோதரிகளும் அடங்குவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.