கட்டுப்படுத்த முடியல.. மோசமான முயற்சி செய்த நபர் - மிரண்டு போன டாக்டர்கள்!

Russia
By Sumathi Jul 24, 2023 04:23 AM GMT
Report

கனவுகளை கட்டுப்படுத்த நபர் ஒருவர் செய்த விபரீத முயற்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபரீத முயற்சி 

ரஷ்யா, நோவோசிபிர்ஸ்க் நகரைச் சேர்ந்தவர் மிகைல் ரதுகா. இவர் தனது கனவுகளைக் கட்டுப்படுத்த நினைத்துள்ளார். இதனால் தனது மண்டை ஒட்டை துளையிட்டு உள்ளே சிப் வைக்க முயன்றுள்ளார்.

கட்டுப்படுத்த முடியல.. மோசமான முயற்சி செய்த நபர் - மிரண்டு போன டாக்டர்கள்! | Russia Man Tried To Place Chip Inside Brain

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் எப்படி ஆப்ரேஷன் செய்கிறார்கள் என்பதை யூடியூபில் பார்த்து அதனை செய்ய முயற்சித்துள்ளார். சுமார் நான்கு மணி நேர அவர் இந்த ஆப்ரேஷனை அவருக்கே செய்துள்ளார். இதில் சுமார் ஒரு லிட்டர் ரத்தத்தை இழந்துள்ளார்.

உயிர் போகும் அபாயம்

அதன் பின் மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நான் ஒரு டிரில்லிங் இயந்திரம் வாங்கினேன். என் தலையைத் துளையிட்டு, என் மூளையில் ஒரு சிப்பை பொருத்தினேன்.

இதனால் எனக்கு மிகப் பெரியளவில் ரத்த இழப்பு ஏற்பட்டது. உயிரிழக்கும் சூழலுக்கும் கூட தள்ளப்பட்டேன். இருப்பினும், எனது ஆப்ரேஷன் வெற்றிகரமாகவே இருந்தது. கனவுகளைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை இது திறந்துள்ளது.

கனவுகள் வரும் போது அதை முறையாகச் சோதனை செய்ய எனக்கு இது தேவைப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.