பொண்னை இப்படியா ரோட்டுல ஆட விடறது - மனமுடைந்த பிரபல சீரியல் நடிகை

Serials
By Sumathi Feb 10, 2023 05:13 AM GMT
Report

தொகுப்பாளினியாக வலம் வந்தவர் நடிகை காவ்யா.

 காவ்யா

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற `ரோஜா' தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. அதில் வில்லியாக நடித்து பிரபலமானவர். இந்நிலையில், இவர் சந்தித்த கடந்த கால வேதனைகளை பகிர்ந்துள்ளார். அதில், சின்ன வயசில ஏதோ சொந்தக்காரங்க கல்யாணத்துல ஆடச் சொன்னாங்க.

பொண்னை இப்படியா ரோட்டுல ஆட விடறது - மனமுடைந்த பிரபல சீரியல் நடிகை | Roja Serial Fame Kavya Talks About Her Career

அப்படி ஆடினதைப் பார்த்துட்டு தொடர்ந்து ஆடச் சொன்னாங்க. கல்யாண வீடுகளில், கோயில் திருவிழாக்களில் கச்சேரிகளுக்குத்தான் ஆடப் போனேன். அப்ப நான் ஏழாம் வகுப்பு படிச்சிட்டு இருந்ததால தொடர்ந்து என்ன பண்ணுவ, எப்படி பெரியப் பொண்ணாகி ஆடுவன்னுலாம் வீட்ல சொல்ல ஆரம்பிக்கவும் ஆடத் தானே கூடாது, அப்பப் பாடுறேன்னு ஆரம்பச்சதுதான் சிங்கிங்.

 ஆதங்கம்

நிறைய சொந்தக்காரங்க ஆரம்ப காலகட்டத்தில் எங்க வீட்டுக்கு வர்றதையே தவிர்த்திருக்காங்க. 'வயசுக்கு வந்த பொண்ணை ஸ்டேஜ்ல ஆட விட்டிருக்க'ன்னுலாம் என் அம்மாகிட்ட கேட்டிருக்காங்க. 'எவ்ளோ பணக்கஷ்டம் வந்தாலும் பொண்ணை இப்படியா ரோட்டுல ஆட விடறது'ன்னுலாம் கேட்டிருக்காங்க.

பொண்னை இப்படியா ரோட்டுல ஆட விடறது - மனமுடைந்த பிரபல சீரியல் நடிகை | Roja Serial Fame Kavya Talks About Her Career

எனக்கு முப்பது வயசுக்கு மேலதான் திருமணமாச்சு. அதனால, என் அம்மாகிட்ட அடிக்கடி, 'எனக்குக் கல்யாணம் ஆகுமா'ன்னுலாம் கேட்பேன். நமக்குக் கல்யாணமே ஆகாது போலன்னுலாம் என் மனசைத் தேத்திக்கிட்ட நாள்கள் எல்லாம் இருந்துருக்கு. அரேஞ்சிடு மேரேஜ்தான் எங்களுடையது. என்னைப் புரிஞ்சுகிட்ட நல்ல மனிதர் கணவரா அமைஞ்சது பாக்கியம்.

அனுபவம் 

லேட்டா மேரேஜ் நடந்ததால குழந்தை பிறக்குமான்னு ரொம்ப பயந்தேன். என்னோட லைஃப்ல ரொம்ப எமோஷனல் தருணம்னா என் ட்வின்ஸ் குழந்தைங்க பிறந்த சமயம்தான். என் கரியருக்காக பக்கபலமா என் கணவர் இருந்ததனால தொடர்ந்து நடிக்க முடியுது.

இப்ப ஒரு வெப்சீரிஸில் லீட் ரோலில் நடிக்க கமிட் ஆகியிருக்கேன். தொடர்ந்து ஆர்கெஸ்ட்ராவில் பாடிட்டும் இருக்கேன் எனத் தெரிவித்துள்ளார்.