சூப்பர் தலைவா..புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா - குவியும் வாழ்த்துக்கள்..!

Rohit Sharma Indian Cricket Team
By Thahir Jul 07, 2022 09:52 PM GMT
Report

13 டி.20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமை பெற்று சாதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.

 டி20 போட்டி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கின்றன.

இரு அணிகளுக்கும் இடையே முதல் டி20 போட்டி சவுத்தம்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

T20 Cricket

துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தீபக் ஹூடா 33 ரன்களும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் அடித்தனர்.

ஹர்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அக்சர் படேல் 17 ரன்னுடன் வெளியேறினார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

இந்தியா அணி அபார வெற்றி 

இதையடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜசன்ராய் 4 ரன்னுடன், கேப்டன் ஜாஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டானார்கள்.

டேவிட் மலன் 21 ரன்னும், ஹாரி புரூக் 28 ரன்னும் அடித்தனர். லிவிங்ஸ்டோன் டக்அவுட்டானர். அதிகபட்சமாக மொயின் அலி 36 ரன்கள் அடித்தார்.

கிரிஷ் ஜோர்டன் ரன்கள் அடித்தார். 19.3 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதையடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Hardik Pandya

இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களை கைப்பற்றினார். சாஹல் மற்றும் அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். புவனேஸ்குமார், ஹர்சல் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

சாதனை படைத்த ரோஹித் சர்மா

இந்த நிலையில் இந்த முதல் டி.20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர்ந்து 13 டி.20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.

Rohit Sharma

புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!