ஒருநாள் போட்டியில் கழட்டிவிடப்படும் முக்கிய வீரர் - ரோகித் அதிரடி

Rohit Sharma Indian Cricket Team Suryakumar Yadav
By Sumathi Mar 20, 2023 05:30 AM GMT
Report

இரண்டாவது ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் மீண்டும் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

IND vs AUS

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் படுதோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சூர்யகுமார் நன்றாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்று அவருக்கு கண்டிப்பாக தெரியும்.

ஒருநாள் போட்டியில் கழட்டிவிடப்படும் முக்கிய வீரர் - ரோகித் அதிரடி | Rohit Sharma Said About Suryakumar In Odi

ஸ்ரேயாஸ் ஐயர் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்று எங்களுக்கு தெரியாது. இதனால் அந்த இடம் தற்போது காலியாக இருக்கிறது. இதனால் தான் சூரியகுமார் யாதவ் இந்திய அணியில் விளையாடுகிறார். வெள்ளை நிற பந்தில் அவர் எவ்வளவு சிறப்பாக விளையாடுவார் என்று நாம் அனைவருக்குமே தெரியும்.

ரோகித் விளக்கம்

ஒரு நாள் கிரிக்கெட்டிலும் அவர் அதிரடியாக விளையாடக் கூடிய திறமை இருக்கிறது. நான் ஏற்கனவே நிறைய முறை கூறிவிட்டேன். திறமையான வீரர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படும். ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பது சூர்யகுமார் யாதவும் தெரிந்து கொள்ள வேண்டும்.

டி20 யை விட இது கொஞ்சம் நீண்ட போட்டியாகும். அவர் மனதளவில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். ங்களுடைய திறமை வாய்ந்த பந்துவீச்சாளராக சிராஜ், சமி ஆகியோர் இருக்கிறார்கள். உம்ரான் மாலிக் மற்றும் ஜெய்தேவ் உனாட்கட் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.

நாங்கள் இன்றைய ஆட்டத்தில் சரியாக விளையாடவில்லை. முதலில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தால் அதன் பிறகு பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தை எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.