மதுவுக்கு அடிமையான நடிகர் ரோபோ ஷங்கர் - வெளியான அதிர்ச்சி தகவல்..!
கடந்த சில மாதங்களாக நடிகர் ரோபோ சங்கர் உடல் மெலிந்து இருக்கும் நிலையில் அது குறித்து தகவல் ஒன்றை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் அறிமுகம்
விஜய் டிவி நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு? மூலம் அறிமுகமானவர் ரோபோ ஷங்கர். பின்னர் தன்னுடைய அசாத்திய காமெடி திறமையால் தொகுப்பாளர் என முன்னேறிய அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
இதையடுத்து அவர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி, புலி, போன்ற திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.
எலும்பும், தோலுமாக மாறிய ரோபோ ஷங்கர்
இவர் அண்மையில் வீட்டில் அனுமதியின்றி அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்ததற்காக அபாரதம் செலுத்தி சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில் விஜய் டிவியில் தொகுப்பாளர் பிரியங்கா தொகுத்து வழங்கி வரும் Start Music Season 4 இல் பங்கேற்ற நடிகர் ரோபோ சங்கர் ஆளே அடையாளம் தெரியாத வகையில் படும் ஒல்லியாக எலும்பும், தோலுமாக இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர் சுறுசுறுப்பு இன்றி காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சினிமா பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ரோபோ சங்கரின் உடல் நிலை இப்படி ஆனதற்கான அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மது பழக்கத்திற்கு அடிமையான ரோபோ ஷங்கர்
சினிமா நடிகர்கள் பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற நடிகர்கள் உடல் எடையை குறைக்க எந்தவித ரசாயன பொருட்களைப் உட்கொள்ளாமல் தகுந்த உடற்பயிற்சி செய்து குறைத்தார்கள்.
அண்மையில் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்த நிலையில் இருக்கும் போட்டோ பார்த்து அதிர்ந்து போனேன். ரோபோ சங்கர் மிமிக்ரி கலைஞராக இருக்கும்போதிலிருந்தே எனக்கு தெரியும்.
அந்த சமயத்தில் அவர் நன்றாக ஒர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக பார்த்துக்கொண்டார். அவர் பிரபலமான பின்னர் சேரக்கூடாத நண்பர்களுடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையானார்.
மது குடிக்காமல் தூக்கமே வராது என்கிற நிலைக்கு அவர் மாறிவிட்டார். அவர் பப்ளிக்காக ஓட்டலில் மது அருந்தியதை பலரும் பார்த்திருக்கின்றனர்.
மதுப்பழக்கத்தால் அவருக்கு வந்த மஞ்சல் காமாலை தான் அவர் இந்த நிலைக்கு வந்ததற்கு முக்கிய காரணம். தற்போது அவர் நிற்கக்கூட முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார் என அவரை பார்த்தவர்கள் சொன்னார்கள் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil
