வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் - நள்ளிரவில் நடிகை சோனாவிற்கு நேர்ந்த விபரீதம்!

Tamil Cinema Chennai Actress
By Vidhya Senthil Oct 04, 2024 05:59 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

 மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி நடிகை  சோனாவை மிரட்டி உள்ளனர்.

 நடிகை சோனா

தமிழ் சினிமாவில்அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் வையாபுரி டாவடிக்கும் கல்லூரி மாணவியாக அறிமுகமானவர் நடிகை சோனா. தெலுங்கில் 25 படங்களுக்கும் மேல் நடித்துப் பிரபலமானார்.

அதன் பிறகு  மீண்டும் தமிழுக்கு வந்து  ஷாஜகான், ஜித்தன், குசேலன், மிருகம் என பல்வேறு படங்களில் நடித்து பிரபல நடிகையாக சோனா வலம் வந்தார்.

actress sona

அதுமட்டுமில்லாமல் ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் ஆடை ஆபரணங்கள் விற்கும் யுனிக் என்ற கடையைத் தொடங்கி நடத்தி வருகிறார்.மேலும் யுனிக் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பிலும் நடிகை சோனா பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர், 28வது தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அந்த பட்டம் வலியை கொடுத்தது; எனக்கு அது கூட நடக்கவில்லை - நடிகை சோனா வேதனை!

அந்த பட்டம் வலியை கொடுத்தது; எனக்கு அது கூட நடக்கவில்லை - நடிகை சோனா வேதனை!

நேற்றிரவு மர்ம நபர்கள் இருவர் அவரது வீட்டின் சுற்றுச்சுவர் சுவரை ஏறிக் குதித்து, வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டை திருட முயன்றுள்ளனர். அப்போது, சோனா வளர்க்கும் நாய் அவர்களைப் பார்த்துக் குரைக்கவே, சத்தம் கேட்டு சோனா வெளியே வந்து பார்த்துள்ளார்.

 மர்ம நபர்கள் 

அவரைப் பார்த்ததும் 2 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்ப முயன்ற நிலையில், நடிகை சோனா அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். இதனால் அந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி சோனாவை மிரட்டி உள்ளனர்.

police

இதனால் அதிர்ச்சியடைந்த  நடிகை  சோனா அப்போது தப்பிச் செல்ல முயன்று கீழே விழுந்ததில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் காவல்துறை, வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி மர்ம நபர்கள் யார் எனத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.