கரூரை உலுக்கிய மாந்தோப்பு விவகாரம் - நிகழ்ந்த கொடூர சம்பவம்!

Attempted Murder
By Vinothini May 23, 2023 06:19 AM GMT
Report

 சமீபத்தில் கரூரில் உள்ள மாந்தோப்பில் நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாந்தோப்பு

கரூர் மாவட்டம், வாங்கல் ஓடையூர் பகுதியில் சரவணக்குமார் என்பவருக்குச் சொந்தமாக மாந்தோப்பு ஒன்று உள்ளது.

இதனை திருச்சி காட்டுப்புத்தூரைச் சேர்ந்த 67 வயதான தங்கவேல், மற்றும் 61 வயதான மைதிலி என்ற தம்பதியினர், கடந்த 15 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்துள்ளனர்.

robbers-killed-old-couple-in-karur

மேலும், அங்கு மாம்பழம் சீசன் வரும்போது அதனை பறித்து விற்பனை செய்தும் வாழ்ந்து வந்தனர்.

அந்த மாந்தோப்பில் பலர் வேலை செய்து வருகின்றனர், அங்கு ஓடையூரைச் சேர்ந்த வாசுகி மற்றும் பாலம்மாள் ஆகிய இருவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது அந்த வயதான தம்பதியினர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனே அந்த இடத்தின் உரிமையாளருக்கும் போலீசிற்கு தகவல் அளித்தனர்.

விசாரணை

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், காயங்களுடன் கிடந்த சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

robbers-killed-old-couple-in-karur

அதில் மைதிலியின் காது, மூக்கு மற்றும் கழுத்து பகுதிகளில் இரத்த காயம் இருந்துள்ளது.

அதோடு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளுக்காக, மர்ம நபர்கள் இருவரையும் கொலை செய்துள்ளது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதோடு, கொலை நடந்த இடத்தில் போலீஸார் மோப்ப நாயை கொண்டு விசாரணை செய்யக் கூடாது என்பதற்காக, கொலை செய்தவர்கள், அப்பகுயில் மிளகாய்பொடி தூவிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.