பணத்தை ஆட்டையப்போட்டு சாரி கேட்ட கொள்ளையன் - பாதிக்கப்பட்டவருடன் இன்ஸ்டா ஐடி பகிர்வு!
கலிபோர்னியாவில் வழிப்பறி கொள்ளையன் ஒருவர் செய்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
வழிப்பறி
கலிபோர்னியாவில், மான்ஹாட்டன் கடற்கரை பகுதியில் கடந்த ஜூலை 2-ம் தேதி வழிப்பறி கொள்ளை நடந்தது. சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட நபர் அங்குள்ள ரோஸ்கிரான்ஸ் அவென்யூ வழியாக நடந்து சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் இருந்த வெள்ளி நிற துப்பாக்கியை காட்டி தனக்கு பணம் வேண்டும் என மிரட்டியுள்ளார். அப்பொழுது அந்த நபர் தன்னிடம் செல்போனும் ஏடிஎம் கார்டு மட்டும் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
சாரி கேட்ட கொள்ளையன்
இந்நிலையில், அந்த கொள்ளையன் அவரை தனது காரில் ஏறும்படி கூறியுள்ளார். பின்னர் அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று அவரது பணத்தை எடுத்துக்கொண்டார். அதன்பிறகு அவரை என்று ஏற்றினாரோ அங்கேயே பத்திரமாக இறக்கிவிட்டதும் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும், இவருக்கு பணம் தேவைப்படுகிறது என்றும் இவர் கொள்ளையடித்ததன் காரணத்தையும் கூறி அவரது செல்போனை நாளை திருப்பி தருவதாக கூறியுள்ளார்.
உடனே பாதிக்கப்பட்டவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியை வழிப்பறிக் கொள்ளையனிடம் கொடுத்து இருவரும் தொடர்பில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின்னர், கொள்ளையன் அவரது காரில் ஏறி சென்றுவிட்டார் என்று அந்த பகுதி காவல்துறையினர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.