மனைவி குறித்த தகவல்; மன்னிப்பு கேட்ட பிரதமர் ரிஷி சுனக் - பின்னணி என்ன?
பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷி சுனக்
குழந்தை பராமரிப்பு திட்டத்தில் சேரும் நிறுவனங்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது. இந்த நிதி வழங்குவதற்காக அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில்
ஒரு நிறுவனத்தில் ரிஷி சுனக்கின் மனைவிக்கு ஷேர்கள் உள்ளன. இதை அறிவிக்க ரிஷி சுனக் தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால், அவர் னைவி அக்சதா மூர்த்திக்கு வருமானம் வரும் தொழில் தொடர்பான தகவலை தெரிவிக்கத் தவறியதன் மூலம், பாராளுமன்ற நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மன்னிப்பு
அதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற தரநிலை கமிஷனர் கிரீன்பெர்க் விசாரணை நடத்தினார். அதில், தான் மந்திரிசபை பதிவேட்டில் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்ற தரநிலை கண்காணிப்பு அமைப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதனையடுத்து அவரது கடிதத்தில் கவனக்குறைவான பிழைகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும்,
திருத்துவதற்கான முன்மொழிவை ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு கண்காணிப்பு அமைப்பு தலைவர் கிரீன்பெர்க் இது குழப்பத்தால் ஏற்பட்ட கவனக்குறைவு எனத் தெரிவித்துள்ளார்.