சதம் விளாசிய ரிஷப் பண்ட் : தெறிக்க விடும் இந்திய அணி
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கியுள்ள ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என சர்வதேச கிரிக்கெட் பவுலர்களின் பந்தை அடித்து துவம்சம் செய்து வருகிறார்.
அண்மைகாலமாக ரிஷ்பண்ட் 90 ரன்களை கடந்ததும் அவுட்டாகி விடுவார், ஆனால் இன்றைய ஆட்டத்தில் நெருக்கடியான சூழலில் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்க்ஸை விளையாடி மாஸ் காட்டியுள்ளார். இன்றைய போட்டியில் 94 ரன்களை எடுத்த ரிஷப் ,இங்கிலாந்து கேப்டன் ரூட் வீசிய பந்தினை சிக்ஸ்ராக தெறிக்க விட்டு சதம் விளாசியுள்ளார் .
இதன் மூலம் 115 பந்துகளில் சதம் கடந்தார் ரிஷப். இந்த அபாரமான இன்னிங்ஸின் மூலம் இந்திய அணியை இந்த டெஸ்ட் போட்டியில் முன்னிலை பெற செய்துள்ளார். ஆனால் ஆண்டர்சன் வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார் பண்ட். இந்திய அணி 89 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்துள்ளார். ஏற்கனவே ரோகித் சர்மா 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Rishabh Pant brings up his hundred with a SIX ?
— ICC (@ICC) March 5, 2021
A sensational knock from the India batsman!#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/b04djHMikJ