அம்மா சத்தியமா சொல்லு.. - குல்தீப்பிடம் சத்தியம் கேட்ட ரிஷப் பண்ட்

Cricket Rishabh Pant
By Karthikraja Sep 09, 2024 07:00 AM GMT
Report

போட்டியின் இடையே குல்தீப்பிடம் ரிஷப் பண்ட் சத்தியம் கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

துலீப் கோப்பை

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

duleep trophy 2024

இதில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணிக்கும் அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. 

ICC தலைவராகும் ஜெய்ஷா; மகிழ்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் - காரணம் என்ன?

ICC தலைவராகும் ஜெய்ஷா; மகிழ்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் - காரணம் என்ன?

இந்தியா ஏ - பி அணி

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி அணி 321 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஷீர் கான் 181 ரன்கள் குவித்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்களை சேர்த்தது. 

kuldeep yadav and rishabh pant

இதன் மூலம் 90 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா பி அணி ரிஷப் பண்ட்டின் அரைசதத்துடன் 2வது இன்னிங்ஸில் 184 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் பின் 275 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணி 6 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

சத்தியம் கேட்ட ரிஷப் பண்ட்

அப்போது குல்தீப் யாதவ் பேட்டிங் செய்த போது, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த ரிஷப் பண்ட், சிங்கள் எடுப்பதை தடுக்க பீல்டர்களை அருகே வருமாறு அழைத்தார். இதனை கேட்ட குல்தீப் யாதவ் உடனடியாக ரிஷப் பண்ட் பக்கம் திரும்பி, நான் சிங்கிள் எடுக்க போவதில்லை என்று பதில் அளித்தார். 

அப்போது ரிஷப் பண்ட், "அம்மா சத்தியமா சொல்லு.. சிங்கள் எடுக்க மாட்டேன்னு" என்று ஜாலியாக கேட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் இந்தியா ஏ அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா பி அணி வெற்றிபெற்றுள்ளது.