மனைவியின் பகீர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் - அதிர்ச்சியில் போலீசில் புகாரளித்த கணவன்!
கணவரை கொன்றால் ரூ.50,000 என மனைவி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்
உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து பெண் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கணவனை பிரிந்த மனைவி தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். மேலும், இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட காரணம், வீட்டின் அருகே வசிக்கும் ஒரு நபருடன் மனைவி கள்ளத் தொடர்பு வைத்திருந்தது என்றும் கூறப்படுகிறது.
கணவன் புகார்
இந்நிலையில் மனைவி தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் "கணவரை கொலை செய்பவருக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஸ்டேட்டஸ் தொடர்பாக கணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அந்த புகாரில் "தனது மாமியார் கடந்த 2023ல் தன்னை தொடர்பு கொண்டு கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும், மனைவியின் காதலன் தன்னை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.