மாலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சரணடைந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்!
இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சரணடைந்துள்ளார்.
பாலியல் தொல்லை
கர்நாடகா, பெங்களூருவில் ராஜாஜி நகரில் லுலு மால் உள்ளது. இங்கு இளம்பெண் ஒருவரை முதியவர் ஒருவர் நெருங்கி வந்து தகாத முறையில் தொடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டது.
இதுகுறித்து வீடியோ பதிவிட்ட நபர், " மாலில் இருந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் அந்த முதியவர் இதுபோன்ற தகாத செயலில் ஈடுபட்டார். முதலில் நான் அவரை மிகவும் நெரிசலான பகுதியில் பார்த்த போது, அவர் மீது சந்தேகமாக உணர்ந்தேன். வீடியோ பதிவு செய்ய அவரைப் பின் தொடர்ந்தேன்.
சரணடைந்த முதியவர்
அப்போது அவர் இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டது பதிவானது. இதுகுறித்து மால் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினேன். அவர்கள் அந்த நபரைத் தேடிப்பார்த்தனர். ஆனால், அந்த முதியவரைக் காணவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
The video of a young woman being sexually harassed by an elderly man at a mall in #Bengaluru went viral on social media following which the #BengaluruPolice began a probe.
— Hate Detector ? (@HateDetectors) October 30, 2023
The video shows the accused man deliberately touching the back of the woman at the games zone in the… pic.twitter.com/eOSf3prNR8
தொடர்ந்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அஸ்வத் நாராயணா(60) என்ற ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் இன்று போலீஸில் சரணடைந்தார்.
விசாரணையில், வார இறுதி நாட்களில் கடைவீதியில் கூட்டத்தைப் பயன்படுத்தி பெண்கள் மற்றும் இளைஞர்களைத் தகாத முறையில் அவர் தொடுவது வழக்கம் என்பது தெரிய வந்தது.