வன்னியர்கள் 10.5% இடஒதுக்கீடு வழக்கு விவகாரம் - சென்னைக்கு மாற்றி மதுரை கிளை உத்தரவு

chennai madurai reservation vanni
By Jon Mar 16, 2021 11:09 AM GMT
Report

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரிய 2 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியா், வன்னியக் கவுண்டா், வன்னிய குல ஷத்ரியா் உள்ளிட்ட 7 பிரிவினருக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றி உள்ளது.

ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கி உள்ளன. இதனால், 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அந்த சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்துசெய்யக்கோரிய 2 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.


Gallery