பீர் ஆபத்தில்லை மகிழ்ச்சியை தரும் ஆனால்.. இப்படி குடித்தால் நீண்ட நாள் வாழலாம் - ஆய்வில் தகவல்!

World
By Vinothini Sep 09, 2023 06:24 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

ஆய்வில் பீர் குடிப்பதன் நன்மைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பீர் பிரியர்கள்

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் பீர் பிரியர்கள் தினமும் குடித்து பீர் மாதத்தை கொண்டாடி வருகின்றனர். பீரில் ஆல்கஹால் அளவு மற்ற மதுபானங்களை விட குறைவாக இருப்பதால் இதனை அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர். பீர் ஆபத்து என்று பலர் நினைக்கின்றனர், ஆனால் அதில் உள்ள நன்மைகள் குறித்து ஆய்வில் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

researchers-revealed-benefits-of-beer

அதில், "அளவாக பீர் குடிப்பது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பின்லாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, மற்ற ஆல்கஹால்களை விட பீர் குடிப்பது சிறுநீரகத்திற்கு குறைவான தீங்கு விளைவிக்கும். பீர் குடிப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு 100 மில்லிக்கு மேல் குடிக்கக்கூடாது".

ஆய்வில் தகவல்

இதனை தொடர்ந்து, ஆய்வில், "பீர் குடிப்பதால் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இது மன அமைதியை தரும். பீர் மக்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இது உடலில் வைட்டமின் பி அளவை அதிகரிக்க உதவுகிறது. டச்சு ஆய்வின்படி, பீர் குடிக்காதவர்களை விட பீர் குடிப்பவர்களுக்கு 30 சதவீதம் வைட்டமின் பி 6 அதிகமாக உள்ளது. இதில் வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது".

researchers-revealed-benefits-of-beer

மேலும், "சான்டியாகோவை சேர்ந்த மாடில்டா கார்சியா மற்றும் டோரிஸ் ஆலிவ் ஆகியோர் தங்கள் நீண்ட ஆயுளின் ரகசியத்தை பத்திரிகைகளுக்கு வெளிப்படுத்தினர். ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் பீர் குடிப்பதாக கூறியுள்ளனர். பீர் குடிக்காதவர்களை விட லேசாக குடிப்பவர்கள் 19 சதவீதம் அதிக காலம் வாழ முடியும்" என்பதை வர்ஜீனியா டெக் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அதிகப்படியான பீர் குடிப்பது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உடலில் நீரிழப்பும் ஏற்படலாம். சிறுநீரகத்திற்கு நன்மை செய்வதற்கு பதிலாக, தீங்கும் விளைவிக்கும், எனவே மருத்துவரின் ஆலோசனை படி குடிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.