நாட்டை உலுக்கிய சம்பவம்; துடிக்கும் 40 உயிர்கள் - புதிய நிலச்சரிவு, தொடரும் போராட்டம்!

Uttarakhand
By Sumathi Nov 15, 2023 01:07 PM GMT
Report

புதிய நிலச்சரிவால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை விபத்து

உத்தரகாண்ட், உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 4வது நாளாகம் நடந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் எஃகு குழாய்களை செலுத்தி தொழிலளார்களை மீட்கும் விதமாக புதிய இயந்திரத்தை நிர்மாணிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

uttarakhand-tunnel-collapse

இந்நிலையில், நேற்று இரவு ஏற்பட்ட புதிய நிலச்சரிவு காரணமாக மீட்புப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகளில் ஈடுப்பட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

சுரங்கப்பாதை விபத்து; 40 பேரின் கதி என்ன? ஆய்வுப்பணி தீவிரம்!

சுரங்கப்பாதை விபத்து; 40 பேரின் கதி என்ன? ஆய்வுப்பணி தீவிரம்!

புதிய நிலச்சரிவு

தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக குழாய் வழியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. உணவு பொருட்கள், குடிநீர் உள்ளிட்டவை மற்றொரு குழாய் வழியாக விநியோகிக்கப்பட்டும், வாக்கி டாக்கி மூலம் தொழிலாளர்களுடன் அதிகாரிகள் அவ்வப்போது பேசி வருகின்றனர்.

நாட்டை உலுக்கிய சம்பவம்; துடிக்கும் 40 உயிர்கள் - புதிய நிலச்சரிவு, தொடரும் போராட்டம்! | Rescue Of 40 Laborers Continues 4Th Day Uttarkhand

இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.