அதுல ஈடுபாடு இல்ல.. அந்த வீட்டுக்குள்ள போகவே மாட்டேன் - கொதித்த ரேகா நாயர்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது குறித்து ரேகா நாயர் பேசியுள்ளார்.
ரேகா நாயர்
பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் அறியப்பட்டவர் நடிகை ரேகா நாயர். இவர் எதையும் துணிவோடு பேசக்கூடியவர். சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து, இவர் குறித்த சர்ச்சை பேச்சுக்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் 7ல் ரேகா நாயர் பப்லு ப்ரித்விராஜ், ரச்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ்உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியிருந்தது.
பிக்பாஸ்
அதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய ரேகா நாயர், "பிக்பாஸ் வீட்டுக்குள் எதற்காக நான் போக வேண்டும். என்னை ஒரு காட்டுக்குள் போய் இருக்க சொன்னால்கூட அங்கு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இருப்பேன்.
ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் போகமாட்டேன். பிக் பாஸில் நான் கலந்துகொள்ளப்போவதாக கடந்த மூன்று சீசன்களாக சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களை எல்லாம் விட்டுவிடுங்கள்.
முதலில் அங்கு போக எனக்கு விருப்பம் வேண்டுமல்லாவா. நூறு நாட்கள் போய் அந்த வீட்டுக்குள் இருப்பதற்கு பதிலாக நூறு மரங்கள் வைக்கலாம். அங்கு போவதற்கு எனக்கு கொஞ்சமும் ஈடுபாடு இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.