தொடரும் சோகம்...அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு - 3 பேர் உயிரிழப்பு..!

United States of America
By Thahir Jun 05, 2022 10:18 AM GMT
Report

அமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் மக்கள் அதிக அளவில் கூடியிருந்த பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

தொடரும் சோகம்...அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு - 3 பேர் உயிரிழப்பு..! | Re Shooting In Us 3 Dead

இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு தெற்கு தெரு பகுதிக்கு வந்த போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்ற நபர்கள் மீது அதிரடியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் மர்ம நபர் ஒருவர் காயமடைந்தார்.இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இந்தாண்டு மட்டும் 140 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக துப்பாக்கி வன்முறை ஆய்வு குழு தெரிவித்துள்ளது. 

கடலூரில் பெரும் சோகம் : தடுப்பணையில் குளித்த 7 பேர் நீரில் மூழ்கி பலி