கடலூரில் பெரும் சோகம் : தடுப்பணையில் குளித்த 7 பேர் நீரில் மூழ்கி பலி

Tamil nadu
By Irumporai Jun 05, 2022 09:31 AM GMT
Report

கடலூர்  மாவட்டம் அருகே உள்ள  கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கடலூர் அருங்குணத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுழலில் சிக்கி பலி

ஆற்றில் குளிக்க சென்ற  சிறுமிகள் சுமுதா, பிரியா,மோனிகா, சங்கீதா, பிரியதர்ஷினி கவிதா மற்றும் இளம்பெண் நவநீதா ஆகியோர் சென்றனர் , தடுப்பணைக்கு அருகே ஏற்பட்ட சுழல் காரணமாக இரண்டு பேர் நீரில் மூழ்க , அவர்களைக் காப்பாற்ற சென்ற மற்ற 5 பேரும் நீரில் மூழ்கினர்.

கடலூரில் பெரும் சோகம் : தடுப்பணையில் குளித்த 7 பேர் நீரில் மூழ்கி  பலி | 7 Killed In Kedilam River Near Cuddalore

நீரில் மூழ்கி 7பேர் பலி

நீரில் மூழ்கி மயங்கிய அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 7 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கடலூரில் பெரும் சோகம் : தடுப்பணையில் குளித்த 7 பேர் நீரில் மூழ்கி  பலி | 7 Killed In Kedilam River Near Cuddalore

ஆற்றில் குளித்த 2 சிறுமிகள், 5 பெண்கள் என 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திருமணமாகி ஒரு மாதமே ஆன இளம்பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் இறந்தவர்களின்  உடல்கள் கடலூர் அரசு மருத்துவமனையில்  வைக்கப்பட்டுள்ளது, இந்த சம்பவம் குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.