Thursday, Jun 19, 2025

ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலியான மகன் - தந்தை கண்ணீருடன் வைத்த அந்த கோரிக்கை

Royal Challengers Bangalore Bengaluru Death IPL 2025
By Sumathi 14 days ago
Report

ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

மகன் பலி

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்றுள்ளது. அந்த அணி வெற்றி பெற்றதில் இருந்து ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகமடைந்து பட்டாசுகளை வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலியான மகன் - தந்தை கண்ணீருடன் வைத்த அந்த கோரிக்கை | Rcb Victory Celebrations Son Died Father Plea

தொடர்ந்து, பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் அருகே கர்நாடக அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து விமான நிலையத்தில் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் உற்சாகத்துடன் பூங்கொத்து வழங்கி பெங்களூர் அணியினரை வரவேற்றார்.

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம் - நெரிசலில் சிக்கி ரசிகர்கள் 11 பேர் பலி!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம் - நெரிசலில் சிக்கி ரசிகர்கள் 11 பேர் பலி!

தந்தை உருக்கமான கோரிக்கை

அதன்பின் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்து வீரர்கள் வருகை தந்தனர். ஏற்கனவே அங்கு ரசிகர்கள் அதிகளவில் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, சிலர் மயங்கி விழுந்தனர். ஆர்சிபி வீரர்களின் வெற்றிப் பேரணி இதனால் ரத்து செய்யப்பட்டது. இந்த நெரிசலில் 14 வயது சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

bengaluru

இதற்கிடையில், மைதானத்திற்கு வந்த வீரர்களுக்குச் சிறிய அளவில் பாராட்டு விழா நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா, கூட்ட நெரிசல் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் தந்தை, தனக்கு ஒரு மகனே இருப்பதாகவும், தன்னிடம் கூறாமல் இந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு வந்ததாகவும், அவரை கத்தியால் வெட்டித் தன்னிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று அதிகாரிகளிடமும், செய்தியாளர்களிடமும் தெரிவித்துள்ளார்.