ஏமாற்றமா இருக்கு; திருப்புமுனையே அதுதான் - ஸ்ரேயாஸ் ஆதங்கம்
தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
பஞ்சாப் தோல்வி
ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் பஞ்சாப் கிங்ஸ் அணி பெரும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து முதல் ஐபிஎல் தொடர் வெற்றியை இழந்துள்ளது.
இரண்டாவது முறையாக தொடர்ந்து ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வெல்ல கிடைத்த அரிய வாய்ப்பு ஸ்ரேயாஸ் ஐயருக்கு நழுவிப் போய்விட்டது. இந்த தோல்வி குறித்து பேசியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த தோல்வி வருத்தமாக இருக்கிறது.
ஸ்ரேயாஸ் வருத்தம்
ஆனால் எங்கள் வீரர்கள் எப்படி வாய்ப்பை எதற்கு கொண்டார்கள் என்பது சிறப்பாக இருக்கிறது. மேலும் எங்கள் அணியில் ஆதரவு ஊழியர்கள் வரை சிறப்பாக இருந்தார்கள். எங்கள் அணி சார்பாக பங்கேற்ற அணி உரிமையாளர்கள் வரை சிறப்பானவர்கள். கடந்த போட்டியை வைத்து பார்க்கும் பொழுது இங்கு 200 ரன்கள் கூட சரியானதுதான்.
அவர்கள் அற்புதமாக பந்த வீசினார்கள். க்ருனால் பாண்டியா குறிப்பாக சிறப்பாக இருந்தார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது அதை பயன்படுத்தினார். அவர்தான் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை உண்டாக்கி விட்டார். எங்கள் இளம் வீரர்கள் ஒவ்வொருவர் குறித்தும் நான் பெருமைப்படுகிறேன்.
அவர்கள் அனைவரும் அச்சமற்ற முறையில் விளையாடினார்கள். நாங்கள் அடுத்த ஆண்டு திரும்பி வந்து சிறப்பாக விளையாடி இந்த கோப்பையை வெல்வோம். எங்களால் மீண்டும் நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.