இது சரிப்பட்டு வராது - தொடர் தோல்வி - இன்றைய போட்டியில் RCB'யில் அதிரடி மாற்றம்
இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 1'இல் மட்டுமே பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
RCB
பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள போதும், இது வரை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகின்றது. இந்த ஆண்டு அந்த அணிக்கு மற்றொமொரு நெருக்கடியாக பெண்கள் IPL தொடரில் ஸ்ம்ரிதி மந்தனா தலைமையிலான RCB அணி கோப்பியை வென்று அசத்தியுள்ளது.
தொடர்ந்து 16 ஆண்டுகள் கோப்பைக்காக தவித்து வரும் அந்த அணி இந்த வருடமாவது கோப்பையை வெல்லுமா..? என்ற எதிர்பார்ப்பில் அணியின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலையில், இந்த ஆண்டும் ஏமாற்றமே மிஞ்சுயுள்ளது.
தொடர் தோல்வி
இதுவரை RCB அணி 7 போட்டிகளில் (CSK, PBKS, KKR, LSG, RR, MI, SRH) விளையாடி அதில் ஒரு வெற்றி(PBKS) மட்டுமே அந்த அணி பெற்றுள்ளது. இவற்றில் கடைசியாக விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் எட்ட முடியாத 287 ரன்களை சேசிங் செய்த RCB 262 ரன்களை குவித்தது.
இது ஆறுதலான விஷயம் என்றாலும், 6 போட்டிகளில் தோற்ற RCB அணியின் Play off சுற்று கிட்டத்தட்ட முடிந்து விட்ட கனவே. தொடர் தோல்வியால் மீண்டும் அந்த அணியின் ரசிகர்கள் துவண்டு போயுள்ளனர்.
மாற்றம்
இந்த சூழலில் தான் இன்று தனது 8-வது லீக் ஆட்டத்தில் RCB அணி பலமான KKR அணியை எதிர்கொள்கிறது. KKR அணி 6 போட்டிகளில் விளையாடி 4'இல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் RCB அணி மாற்றமாக பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கவுள்ளது. உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்த அணி பச்சை நிற ஜெர்சியில் களமிறங்குகிறது குறிப்பிடத்தக்கது.